Monday 20th of May 2024 01:29:07 AM GMT

LANGUAGE - TAMIL
சரவணபவன் எம்.பியின் வீட்டில் பழைய இரும்பு திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது!

சரவணபவன் எம்.பியின் வீட்டில் பழைய இரும்பு திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வீட்டில் பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் – இராசபாதையில் உள்ள அவரது இல்லத்தில் இந்தச் சம்பவம் நேற்று (04) சனிக்கிழமை இடம்பெற்றது.

வீட்டுக்கு பின்புறமாக உள்ள மதிலால் வளவுக்குள் குதித்த மூவர், வீட்டின் பின்புறமிருந்த இரும்புக் கதிரைகள் உள்ளிட்ட பழைய இரும்புகளை திருடி முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

முச்சக்கர வண்டி சிறிது தூரம் பயணித்த நிலையில் சரவணபவனின் வீட்டில் பொறுப்பாகவிருந்தவரால் துரத்திச் செல்லப்பட்டு அவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்

உடனடியாக அருகில் உள்ள கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூவரையும் கைது செய்தததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றினர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE